For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆம்னி பஸ்சில் கடத்தப்பட்ட ரூ. 1 கோடி எரிசாராயம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

மைசூரிலிருந்து கேரள மாநிலத்திற்கு ஆம்னி பஸ்ஸில் கடத்திச் செல்லப்பட்ட ரூ. 1 கோடி மதிப்புள்ள எரிசாராயத்தை சேலம்போலீஸார் பறிமுதல் செய்தனர்.

சேலம் போலீஸார் வழக்கம் போல சோதனைப் பணியில் ஈடுபட்டிருந்தபோது ஒரு ஆம்னி பஸ்சை நிறுத்திச் சோதனை செய்தனர்.அந்த பஸ் மைசூரிலிருந்து திருவனந்தபுரம் சென்று கொண்டிருந்தது.

பஸ்சை சோதனை செய்து பார்த்தபோது அதில் பயணிகளின் பெட்டிகள் வைக்கும் இடத்தில் பெட்டிகளுக்குப் பதில் 220 கேன்கள்இருந்தன.

அந்த கேன்களில் எரிசாராயம் வைக்கப்பட்டிருந்தது. இவற்றின் மதிப்பு ரூ. 1 கோடி ஆகும். இந்த எரிசாராயத்தை கேரளாவில்வினியோகிகக் கடத்தப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து பஸ் டிரைவரை போலீஸார் விசாரித்தனர்.

அப்போது, பஸ்சின் டிரைவர் தான் பஸ்சின் உரிமையாளர் என்பதும் அவர் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. இவர் கேரள மாநில ஆயுதப்படை போலீஸில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருவதும் விசாரணையின் போதுதெரிய வந்தது.

இதுகுறித்து போலீஸார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X