சென்னை விமான நிலையத்திற்கு விரைவில் கமாண்டோ பாதுகாப்பு
சென்னை:
சென்னை விமான நிலையத்திற்கு விரைவில் மத்திய தொழில்துறை பாதுகாப்புப்படையைச் சேர்ந்த கமாண்டோக்களின் பாதுகாப்பு வழங்கப்படவுள்ளதாக மத்தியசிவில் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் சையத் ஷாநவாஸ் உசேன்அறிவித்துள்ளார்.
இந்தியாவில் தற்போது ஐந்து விமான நிலையங்களுக்கு மத்திய தொழில்துறைப்பாதுகாப்புப் படையின் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. விரைவில் சென்னைமற்றும் கொல்கத்தா விமான நிலையங்களுக்கும் இந்த பாதுகாப்புவழங்கப்படவுள்ளது.
அமெரிக்காவில் தீவிரவாதிகளின் தாக்குதல் நடந்த பிறகு உலகம் முழுவதும் விமானநிலையங்களில் பாதுகாப்பின்மை நிலவுகிறது. இந்தியாவிலும் தீவிரவாதிகள் தாக்குதல்அபாயம் அதிகம் இருப்பதால் விமான நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களைபாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
சென்னை விமான நிலையம் நாட்டின் முக்கிய விமான நிலையங்களில் ஒன்றாகஇருப்பதால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது கமாண்டோபயிற்சி பெற்ற வீரர்களைக் கொண்ட மத்திய தொழில்துறைப் பாதுகாப்புப்படையினரின் பாதுகாப்பு சென்னை விமான நிலையத்திற்கு விரைவில்கொடுக்கப்படவுள்ளது.
இந்தப் படை வீரர்கள், எந்தவித சூழ்நிலையிலும் திறம்பட செயல்படக் கூடியவகையில் பயிற்சி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.