அம்பேத்கர் சிலை சேதம்-3 லாரிகளுக்குத் தீவைப்பு
சென்னை:
சென்னை அருகே நெரும்பூர் என்ற இடத்தில் லாரி மோதி அம்பேத்கர் சிலை சேதமடைந்ததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் 3 மணல்லாரிகளுக்குத் தீவைத்துக் கொளுத்தினர்.
மாமண்டூர் பகுதியில் உள்ள ஆற்றில் தினசரி 100க்கணக்கனா லாரிகள் மணல் ஏற்றிக் கொண்டு செல்வது வழக்கம். இந்த லாரிகள்நெரும்பூர் வழியாக செல்லும் போது அதிவேகமாக செல்வதால் அப்பகுதியில் அடிக்கடி பலர் லாரியில் அடிபட்டு இறப்பது வழக்கம்.இதனால் அப்பகுதி வழியாக மணல் லாரிகள் வரக் கூடாது என்று அப்பகுதி மக்கள் தடை விதித்தனர்.
இந்த நிலையில், சனிக்கிழமை காலை ஒரு மணல் லாரி அப்பக்கமாக வந்தது. இதைப் பார்த்த பொதுமக்கள் சாலையை மறித்து லாரியைதடுக்க முயன்றனர். இதையடுத்து அவர்களிடமிருந்து தப்புவதற்காக மணல் லாரியை டிரைவர் பின்பக்கமாக வேகமாக திருப்பியுள்ளார்.அப்போது எதிர்பாராத விதமாக சாலையோரம் இருந்த அம்பேத்கர் சிலை மீது லாரி மோதியது. இதில் சிலை சேதமடைந்தது.
இதைப் பார்த்த பொதுமக்கள் ஆத்திரமடைந்தனர். லாரியை வளைத்தப் பிடித்தனர். அவர்களிடமிருந்து டிரைவர் எப்படியோத் தப்பிவிட்டார். இருந்தும் ஆத்திரம் தீராத பொதுமக்கள் லாரிக்குத் தீவைத்தனர். அந்தப் பக்கமாக வந்த மேலும் 2 லாரிகளையும் தடுத்து நிறுத்திதீவைத்துக் கொளுத்தினர்.
இந்த சம்பவம் அறிந்ததும் செங்கல்பட்டு மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் ராஜேந்திரன் தலைமையில் அதிகாரிகள் விரைந்துவந்தனர். பொதுமக்களைச் சமாதானப்படுத்தி கலவரத்தைத் தடுத்தனர்












Click it and Unblock the Notifications