For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கமாண்டரைக் கொன்றதற்கு பழிக்குப் பழி: காபூல் மீது மிக பயங்கர தாக்குதல்

By Staff
Google Oneindia Tamil News

காபூல்:

தனக்கு ஆதரவாக இருந்த நார்த்தர்ன் அலையன்ஸ் கமாண்டரை கொன்ற தலிபான்களுக்கு எதிராக இதுவரைஇல்லாத அளவுக்கு மிக பயங்கரமாகக் குண்டு வீசி அமெரிக்கா தாக்குதல் நடத்தியது.

ஆப்கானிஸ்தானில் தாக்குதல் தொடங்கியதில் இருந்து இப்படிப்பட்ட ஒரு மிக பயங்கரமான குண்டுவீச்சுநடந்ததில்லை.

நார்த்தர்ன் அலையன்ஸ் கமாண்டர் ஹக் அமெரிக்காவின் யோசனைப்படி தலிபான் கட்டுப்பாட்டுப் பகுதியில்புகுந்து மாட்டிக் கொண்டார். அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அவரைக் காப்பாற்ற அமெரிக்க விமானங்கள் எவ்வளவோ கடுமையாக முயன்று குண்டுவீசியும் காக்கமுடியவில்லை.

இதையடுத்து நேற்று பகலில் 20க்கும் மேற்பட்ட விமானங்கள் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விரைந்தன.நூற்றுக்கணக்கான குண்டுகளை வீசின. நேற்று இரவிலும் தாக்குதலைத் தொடர்ந்தன. இன்று காலை 6 மணிக்கேஇந்தத் தாக்குதல் மீண்டும் தொடங்கிவிட்டது.

நார்த்தன்ஸ் அலையன்ஸ் படைகளை எதிர்கொண்டு நிற்கும் தலிபான்களின் படைகள் மட்டுமின்றி உள்பகுதியில்உள்ள அவர்களின் டாங்குகளையும் அமெரிக்க விமானங்கள் சிதறடித்தன.

காபூல் அருதே வசீர் அகமத் கான் பகுதியில் உள்ள தலிபான்களின் ராணுவ கிடங்கையும் விமானங்கள் தாக்கின.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X