For Daily Alerts
Just In
முன்னாள் திமுக எம்.பி. சி.டி. தண்டபாணி மரணம்
கோயம்புத்தூர்:
மூத்த திமுக தலைவரும், முன்னாள் எம்.பியுமான சி.டி. தண்டபாணி கோவையிலுள்ளதனியார் மருத்துவமனையில் இன்று ( ஞாயிற்றுக்கிழமை) காலை மரணமடைந்தார்.
திமுக மூத்த தலைவர்களில் குறிப்பிடத்தக்கவர் சி.டி.தண்டபாணி (68). இவர்நாடாளுமன்ற உறுப்பினாராக மூன்று முறை பதவி வகித்துள்ளார். 1980 முதல் 1984ம்ஆண்டுவரை திமுகவின் நாடாளுமன்ற தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் கோயம்புத்தூர் சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏவாக 1996ம்ஆண்டு முதல் 2001ம் ஆண்டுவரை பதவி வகித்தார்.
தமிழக கூட்டுறவு வங்கியின் தலைவராகவும் தண்டபாணி சில காலம்பணியாற்றியுள்ளார்.
இவர் கடந்த ஒரு மாத காலமாக நோய்வாய்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை மாரடைப்பால் அவர் இறந்து போனார்.
இவருக்கு மனைவியும், 4 மகன்களும், 1 மகளும் உள்ளனர்.
Story first published: Sunday, October 28, 2001, 5:30 [IST]