For Daily Alerts
Just In
மேலும் 16 நார்த்தர்ன் அலையன்ஸ் படையினரை தூக்கிலிட்டது தலிபான்
இஸ்லாமாபாத்:
நார்த்தர்ன் அலையன்ஸ் படையைச் சேர்ந்த மேலும் 16 பேரைத் தலிபான்கள் நேற்று (சனிக்கிழமை)தூக்கிலிட்டனர்.
பிடிபட்ட 5 கமாண்டர்களை மட்டும் தலிபான்கள் தூக்கிலிட்டதாக நேற்று வெளியான செய்திகள் தெரிவித்தன.ஆனால் அவர்களுடன் படிபட்ட 21 பேருமே தூக்கிலிப்பட்டுள்ளனர் என்பது தற்போது தெரியவந்துள்ளது.
நேற்று தான் இந்தப் படையின் முக்கியத் தவைர்களில் ஒருவரான அப்துல் ஹக்கை தலிபான்கள் சுட்டுக் கொன்றனர்.அவரது இறப்பு நார்த்தர்ன் அலையன்சுக்கு பெரும் இழப்பாகும். இந் நிலையில் மேலும் 21 பேரை நார்த்தர்ன்அலையன்ஸ் இழந்துள்ளது.
மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு காண்டஹாரில் பொதுமக்கள் மத்தியில் இதேபோல 5 பேரைத் தாலிபான்கள்தூக்கிலிட்டனர் என்பது குறிப்பிடத் தக்கது.
Comments
Story first published: Sunday, October 28, 2001, 5:30 [IST]