மின் தடையைத் தவிர்க்க ரூ.250 கோடியில் திட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் ஏற்பட்டுவரும் மின்தடையைத் தவிர்க்க ரூ.250 கோடியில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படஉள்ளன என்று மின்சாரத் துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
சென்னை திருவான்மியூர் அருகே உள்ள கொட்டிவாக்கத்தில் அமைந்துள்ள பத்திரிக்கையாளர்கள் குடியிருப்பில்இன்று (ஞாயிற்றுக்கிழமை) இலவச மருத்துவ முகாம் நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது,
தமிழகத்தில் ஏற்பட்டுவரும் மின்தடையைத் தவிர்க்க ரூ.250 கோடியில் பராமரிப்புப் பணிகள் தொடங்கப்டஉள்ளன. மின்கம்பிகள் மற்றும் டிரான்ஸ்பார்மர்கள் ஆகிவை பராமரிக்கப்பட்டு, மின்தடை ஏற்பவது தடுக்கப்படும்.
மின்சார உற்பத்தியைப் பெருக்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கு பொதுமக்கள்ஒத்துழைப்புத் தரவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications