இலங்கை: ராணுவம் தாக்கி 10 விடுதலைபுலிகள் பலி
கொழும்பு:
இலங்கை பாதுகாப்புப் படைக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே நேற்று நடந்த சண்டையில் 10விடுதலைபுலிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
யாழ்ப்பாணத்தில் உள்ள நாகர்கோயிலில் நடந்த சண்டையில் 4 விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டனர்.
அதே பகுதியில் நடந்த மற்றொரு சண்டையில் மேலும் 2 பெண்புலிகள் கொல்லப்பட்டனர்.
மேலும் இலங்கையின் கிழக்குப் பகுதியில் உள்ள நாவல்வாடி என்ற இடத்தில் விடுதலைப்புலிகளுக்குஉதவியவர்கள் மீது பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 4 பேர் கொல்லப்பட்டனர்.
நேற்று மட்டும் மொத்தம் 10 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில்கூறப்பட்டுள்ளது.
கடந்த சுமார் 30 ஆண்டுகளாக இலங்கையில் தமிழர்களுக்குத் தனிநாடு கோரும் விடுதலைப்புலிகளுக்கும்,இலங்கை அரசுக்கும் இடையே கடும் போர் நடைபெற்று வருகிறது. இதில் இருபிரிவிலும் இதுரைை 60,000க்கும்மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications