For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கை: ராணுவம் தாக்கி 10 விடுதலைபுலிகள் பலி

By Staff
Google Oneindia Tamil News

கொழும்பு:

இலங்கை பாதுகாப்புப் படைக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே நேற்று நடந்த சண்டையில் 10விடுதலைபுலிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

நேற்று (சனிக்கிழமை) வெவ்வேறு இடங்களில் நடந்த சண்டையில் கொல்லப்பட்ட விடுதலைபுலிகளின் விவரம்குறித்து இலங்கை பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

யாழ்ப்பாணத்தில் உள்ள நாகர்கோயிலில் நடந்த சண்டையில் 4 விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டனர்.

அதே பகுதியில் நடந்த மற்றொரு சண்டையில் மேலும் 2 பெண்புலிகள் கொல்லப்பட்டனர்.

மேலும் இலங்கையின் கிழக்குப் பகுதியில் உள்ள நாவல்வாடி என்ற இடத்தில் விடுதலைப்புலிகளுக்குஉதவியவர்கள் மீது பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 4 பேர் கொல்லப்பட்டனர்.

நேற்று மட்டும் மொத்தம் 10 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில்கூறப்பட்டுள்ளது.

கடந்த சுமார் 30 ஆண்டுகளாக இலங்கையில் தமிழர்களுக்குத் தனிநாடு கோரும் விடுதலைப்புலிகளுக்கும்,இலங்கை அரசுக்கும் இடையே கடும் போர் நடைபெற்று வருகிறது. இதில் இருபிரிவிலும் இதுரைை 60,000க்கும்மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X