சென்னையில் ரவுடி ஓட ஓட வெட்டி கொலை
சென்னை:
சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியில் ரவுடி ஒருவன் கொல்லப்பட்டதால் அங்கு பதட்டம் நிலவி வருகிறது. இதையடுத்துஅங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் பெரிய ரவுடியாக இருந்து அராஜகம் செய்து வந்தவர் பாபு. இவருக்கும் அதேபகுதியிலுள்ள மற்றொரு ரவுடியான வைரம் என்பவருக்கும் இடையே எப்போதும் மோதல் இருந்து கொண்டேஇருக்கும்.
இந்நிலையில் வைரத்தின் ஆட்கள் ஞாயிற்றுக்கிழமை திடீரென பாபுவை தாக்கினர். இந்த திடீர் தாக்குதலைஎதிர்பார்க்காத பாபு தப்பி ஓடினார். ஆனால் வைரத்தின் ஆட்கள் விடாமல் துரத்தி சென்று அவரை சரமாரியாககுத்தி கொன்றுவிட்டு தப்பி ஓடி விட்டனர்.
இதனால் அங்கு பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மேலும் அசம்பாவித சம்பவம் எதுவும்நடைபெறாமல் தடுக்கும் விதமாக அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்ப்டடுள்ளனர்.
கொலையாளிகளை தேடும் பணியும் நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications