பின் லேடனின் நெருங்கிய நண்பர் பாகிஸ்தானில் கைது

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்:

அமெரிக்கப் போர்க்கப்பல் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாகத் தேடப்பட்டு வந்த பின் லேடனின் நண்பரும்ஏமனைச் சேர்ந்தவருமான மாணவர் ஒருவர் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டார்.

பின் லேடன் தலைமையில் இயங்கிவரும் தீவிரவாத இயக்கமான அல்-காய்தா இயக்கத்தின் தீவிர உறுப்பினராகஇருந்துவந்தவர் ஜமீல் காசிம் ஜமீத் மொகம்மது. இவர் கடந்த 2000ம் ஆண்டு அக்டோபர் மாதம் அமெரிக்காவின்யு.எஸ்.எஸ் கோல் என்ற போர்க் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் தொடர்புடையவர் என்று கூறப்படுகிறது.

அந்தக் கப்பல் ஏமனில் உள்ள ஆதன் என்ற துறைமுகத்தில் எரிபொருள் நிரப்பியபோது அதன் மீது தாக்குதல்நடத்தப்பட்டது. பயங்கர வெடிமருந்துகளுடன் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில் அந்தக் கப்பலில் இருந்த17 பயணிகள் கொல்லப்பட்டனர். மேலும் 39 பேர் படுகாயமடைந்தனர்.

இந்தத் தாக்குதலில் தொடர்புடைய பலரில் இந்த மொகம்மதுவும் ஒருவர். 27 வயதாகும் இவர் ஒருமைக்ரோபயலாஜி மாணவர்.

இவர் தற்போது பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டு, ரகசியமதாக அமெரிக்காவிற்குக் கொண்டு செல்லப்பட்டதாகவாஷிங்டன் போஸ்ட் என்ற பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

இதே குற்றத்திற்காக ஏமனைச் சேர்ந்த மேலும் 8 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு அமெரிக்காவில்விசாரிக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+