For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டான்சி: இன்றுடன் முடிகிறது அரசு வழக்கறிஞர் வாதம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

டான்சி நில பேர ஊழல் வழக்கில் ஜெயலலிதா தாக்கல் செய்திருந்த மேல் மூறையீட்டு மனு மீதான விசாரணைஇன்று (திங்கள்கிழமை) மீண்டும் துவங்கியது. நீதிபதி தினகரின் கேள்விகளுக்கு அரசு சிறப்பு வழக்கறிஞர்வெங்கடபதி பதிலளித்தார்.

1991ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டுவரை ஜெயலலிதா முதல்வராக பதவி வகித்த போது அரசுக்கு சொந்தமானடான்சிநிலத்தை வாங்கியதில் ஊழல் நடந்ததால் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக கூறி ஜெயலலிதா மீது கடந்ததிமுக அரசு வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு தனி நீதிமன்றம் 3 ஆண்டு காலம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.இதனால் ஜெயலலிதாவால் கடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட இயலாமல் போனது.

தனக்கு தனி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில்அப்பீல் மனு தாக்கல் செய்தார் ஜெயலலிதா.

அப்பீல் மனு மீதான விசாரணை நீதிபதி தினகர் முன்பு நடந்து வருகிறது. சரஸ்வதி பூஜை விடுமுறைக்கு பின்திங்கள்கிழமை விசாரணை மீண்டும் துவங்கியது. முன்னரே ஜெயலலிதா தரப்பின் வாதம் முடிந்துவிட்டது.

நீதிபதி எழுப்பிய கேள்விகளுக்கு அரசு சிறப்பு வழக்கறிஞர் வெங்கடபதி பதிலளித்தார். வெங்கடபதியின்வாதங்கள் இன்றுடன் முடிவடையும் என்று தெரிய வந்துள்ளது.

வெங்கடபதியின் வாதத்திற்கு பதிலளித்து ஜெயலலிதாவின் வக்கீல் வாதிடுவார். அவரின் வாதமும் புதன்கிழமைமுடிந்துவிடும் என்று கூறப்படுகிறது.

இன்னும் சில நாட்களில் இந்த விசாரணையின் மீதான தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. இந்த வழக்கு ஜெயலலிதாவின்அரசியல் வாழ்க்கையில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததால் நீதிபதியின் தீர்ப்பை நாடே ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X