தேவர் ஜெயந்தி: ஜெயலலிதாவுக்கு இன்று முளைப்பா-ரி வரவேற்பு
சென்னை:
சென்னையில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு செவ்வாய்க்கிழமை மாலை அணிவிக்கஜெயலலிதா வரும்போது அவருக்கு பெண்கள் முளைப்பாரி ஏந்தி வரவேற்பளிக்கவுள்ளனர்.
தேவரின் பிறந்த நாள் மற்றும் இறந்த நாள் 30ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தேவர் பிறந்தபசும்பொன் கிராமத்தில் குருபூஜை நிகழ்ச்சிக்கு அரசு சார்பிலும், பிற அமைப்புகள் சார்பிலும் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
சென்னை நந்தனம் சிக்னல் அருகே உள்ள தேவர் சிலைக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மாலைஅணிவிக்கிறார். அவர் மாலை அணிவிக்க வரும்போது சிறப்பான வரவேற்பு அளிக்க அதிமுகவினர் ஏற்பாடுசெய்துள்ளனர்.
தேவர் மக்கள் முன்னணி சார்பில் பெண்கள் முளைப்பாரி ஏந்தி வரவேற்பு அளிக்கின்றனர். இந்த நிகழ்ச்சியில்அதிமுக நிர்வாகிகளும் கலந்து கொள்கின்றனர்.
ஜெயலலிதா வருகையையொட்டி தேவர் சிலை உள்ள பகுதியில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications