சென்னையில் விஷ வாயு தாக்கி 3 பேர் சாவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் கழிவு நீர்த் தொட்டியைச் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த 3 பேர் விஷ வாயு தாக்கிபரிதாபமாக இறந்தனர்.

சென்னை ஆவடி அருகே கழிவு நீர் தொட்டியைச் சுத்தப்படுத்தும் பணியில் சிலர் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது தொட்டிக்குள் இருந்த ஒருவர் திடீரென்று மயங்கி தொட்டிக்குள்ளேயே விழுந்து விட்டார்.

இதைக் கண்ட வேறு இரண்டு பேர் அவரைக் காப்பாற்றுவதற்காக தொட்டிக்குள் இறங்கினர். ஆனாலும் அவர்களும்மயங்கி அதே தொட்டிக்குள் விழுந்து விட்டனர்.

இதையடுத்து அந்தத் தொட்டி அருகில் செல்ல அஞ்சிய மற்றவர்கள் போலீசுக்குத் தகவல் கொடுத்தனர்.

தீயணைப்புப் படையினருடன் விரைந்து வந்த போலீசார் தொட்டிக்குள் கிடந்தவர்களை மீட்ட போது, அவர்கள்மூவருமே இறந்து போனது தெரிய வந்தது.

தொட்டிக்குள் கசிந்த விஷ வாயுவை சுவாசித்ததால்தான் குமார், வெள்ளத்துரை மற்றும் செல்வம் ஆகிய இந்தமூன்று பேரும் இறந்து போனதாகக் கூறப்படுகிறது.

ஏழுகிணறில் விஷ வாயு தாக்கி 10 பேர் மயக்கம்

இந்நிலையில் சென்னை-ஏழுகிணறு பகுதியிலும் விஷ வாயு தாக்கி 10 பேர் மயக்கமடைந்தனர்.

சோடியம் ஹைட்ரஜன் சல்பேட் என்ற ரசாயனப் பொருள் இருந்த பாட்டில் உடைந்ததால் அதிலிருந்து வெளியேறியவாயுவை சுவாசித்த இந்த 10 பேரும் உடனே மயக்கமாகிவிட்டனர்.

இவர்கள் அனைவரும் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் உடனடியாகச் சேர்க்கப்பட்டனர்.

நேற்று நள்ளிரவில் இச்சம்பவம் நடந்தது.

இந்த இரண்டு சம்பவங்கள் குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+