அணுகுண்டுகள்: பாகிஸ்தானுக்கு இந்திய அறிவுரை

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் தீவிரவாதிகளிடம் சிக்கிவிடாமல் அந் நாட்டு அரசு பொறுப்புடன் பார்த்துக்கொள்ள வேண்டும் என இந்தியா கூறியுள்ளது.

பாகிஸ்தானிடமிருந்து பின்லேடன் சில அணு ஆயுதங்களை வாங்கியிருக்கலாம் என்ற சந்தேகம் உலகளவில்பரவியுள்ள நிலையில் அந் நாட்டு ராணுவத்தின் வசமுள்ள பிற அணு ஆயுதங்களின் நிலை குறித்து பயம் பரவஆரம்பித்துள்ளது.

முஷாரபுக்கு எதிரான ராணுவ ஜெனரல்கள் அவரது ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்பும்அதிகரித்துக் கொண்டே உள்ளதாக பிரிட்டன் வெளிப்படையாகவே கருத்துத் தெரிவித்துள்ளது.

இதனால், அணு ஆயுதங்களை தீவிரமாக பாதுகாக்குமாறு பாகிஸ்தான் அதிபருக்கு இந்தியா அறிவுறுத்தியுள்ளது.

இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்ணான்டஸ் டெல்லியில் தீவிரவாதம் குறித்த கருத்தரங்கில்பேசுகையில்,

இந்தியாவின் அணு ஆயுதங்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்கள் பொறுப்பானவர்கள். பாகிஸ்தானும்பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.

ஆப்கானிஸ்தானில் ஜனாதிபதி புர்ஹாணுதீன் ரப்பானி தலைமையில் தான் புதிய ஆட்சியை அமைக்க வேண்டும்.ரோம் நாட்டில் வசித்து வரும் முன்னாள் மன்னர் ஷகீர் ஷாவால் ஆட்சி நடத்த முடியாது.

ரப்பானி தலைமையில் நார்த்தர்ன் அலையன்ஸ் மற்றும் தலிபான் தவிர்த்த பிற பிரிவுகள் கொண்ட ஆட்சி தான்அமைய வேண்டும்.

அங்கு அடுத்த ஆட்சியை அமைப்பதில் ரஷ்யா, இந்தியா, சீனாவின் ஆலோசனையை அமெரிக்கா பெறவேண்டும்.

நார்த்தர்ன் அலையன்ஸ் படைக்கு வேறு எந்த நாட்டையும் விட அதிக உதவிகளை இந்தியா வழங்கியுள்ளது.அவர்களுக்கு ஆயுதங்கள், நிதியுதவி, மருத்துவ உதவி என அனைத்து உதவிகளையும் வழங்கி வந்துள்ளோம்என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+