கிரீன் கார்டு முறையை விரிவுபடுத்த ஜெர்மன் திட்டம்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

ஜெர்மனிக்கு வரும் இந்தியர்களுக்கு கிரீன் கார்டு வழங்கும் திட்டம் மேலும் நீட்டிக்கப்பட்டு, விரிவுபடுத்தப்படும்என்று அந்நாட்டு உள்துறை அமைச்சர் ஆட்டோ சிலி கூறினார்.

பெங்களூரில் உள்ள சாப் லேப்ஸ் என்ற சாப்ட்வேர் நிறுவனத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை)நடந்த சாப்ட்வேர்உயர்மட்டக் குழு ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு அவர் பேசுகையில் கூறியதாவது:

ஜெர்மனியில் உள்ள சாப்ட்வேர் இன்ஜினியர்கள் தங்கள் குழந்தைகளை தங்களுடன் அழைத்துச் செல்லஅனுமதியளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்களுடைய பெற்றோர்களையும் அழைத்துச் செல்ல வேண்டுமானால்,அவர் ஒரு வருடமாவது அங்கு தங்கிய பிறகுதான் இயலும்.

மேலும் 5 வருடங்களுக்கு மேலும் ஒருவருக்கு அங்கு வேலை இருக்குமானால் அந்த இன்ஜினியர் அங்கேயேதனது விசாவை புதுப்பித்துக் கொள்ள வசதி உள்ளது.

மேலும் இதுபோன்று வருபவர்களுக்கு ஜெர்மனியில் நிரந்தரக் குடிமகனாக வசிக்க வகை செய்யும் கிரீன் கார்டுதிட்டம் மேலும் நீட்டிக்கப்பட்டு, விரிவுபடுத்தப்படும்.

இதுபோல கடந்த ஆண்டு 10,000 பேர்களுக்கு இந்த வசதியளிக்க ஜெர்மன் அரசு இடஒதுக்கீடு செய்தது. அந்தச்சலுகையை 9,738 பேர் பயன்படுத்தியுள்ளனர். இவர்களில் 2,000 பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

விசா வழங்குவதில் ஏற்படும் காலதாமதத்தைக் குறைக்க நாங்கள் தக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். நல்லதொழில்நுட்ப கலைஞர்களையும், சாதாரண மக்களையும் கூட நாங்கள் வரவேற்கிறோம்.

இந்திய சாப்டவேர் இன்ஜினியர்களுக்கு எதிராக முன்பு ஒருவர் எழுப்பிய கோஷம், ஆர்வமிகுதியால் எழுப்பியது.அவர் தற்போது இந்தியர்கள் மீது நல்ல அபிப்ராயம் கொண்டுள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+