ஆந்த்ராக்ஸ் பீதி - ஜெ.க்கு மலர்க்கொத்து கொடுக்க தடை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஆந்த்ராக்ஸ் விஷக்கிருமி தாக்கும் அபாயம் இருப்பதால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பூங்கொத்துகள்கொடுக்க போலீசார் தடை விதித்துள்ளனர்.

அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் சர்வதேச தீவிரவாதி ஓசாமா பின் லேடனின் ஆதரவாளர்கள்ஆந்த்ராக்ஸ் என்னும் விஷக்கிருமியைப் பரப்பி வருகிறார்கள். தபால் மூலம் இந்தக் கிருமிகள் பரப்பப்பட்டுவருகின்றன. இந்தக் கிருமியின் தாக்குதலால் பாதிக்கப்பட்டு சிலர் இறந்துள்ளனர்.

இதேபோன்ற முயற்சிகளை தீவிரவாதிகள் இந்தியாவிலும் மேற்கொண்டுள்ளனர். சென்னை தாம்பரம்விமானப்படை அதிகாரிக்கு வந்த பார்சலில் தொடங்கி, ஈரோட்டில் உள்ள ஒருவருக்கு வந்த தபால் வரை கடந்தசில வாரங்களாக தமிழகத்திலும் இதுபோன்ற மிரட்டல்கள் நடைபெற்று வருகிறது.

இதையடுத்து ஆந்த்ராக்ஸ் கிருமிகள் தலைவர்களுக்கும் அனுப்படும் என்ற அச்சம் பாதுகாப்பு அதிகாரிகளிடையேபரவியுள்ளது. இதையடுத்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு, அவரைச் சந்திக்க வருபவர்கள் யாரும்மலர்க்கொத்து (பொக்கே) கொண்டுவரக் கூடாது என்று போலீசார் அறிவித்துள்ளனர்.

தற்போது பொன்னாடை போர்த்த மட்டுமே கட்சித் தொண்டர்களும், மற்ற தலைவர்களும் அனுமதிக்கப்பட்டுவருகின்றனர்.

மலர்க் கொத்து மூலம் ஆந்த்ராக்ஸ் கிருமிகளைப் பரப்ப முடியும் என்பதால், போலீசார் இந்த முன்னெச்சரிக்கைநடவடிக்கையை எடுத்துள்ளனர். இதை அறியாமல் மலர்கொத்து கொண்டு வருபவர்களிடம் போலீசாரே அவற்றைவாங்கி வைத்துக் கொள்கின்றனர்.

இதுபோன்ற அனுபவம் கடந்த ஞாயிற்றுக் கிழமை ஜெயலலிதாவைச் சந்தித்துக் கட்சியில் இணைய வந்த மிசாபாண்டியனுக்கு ஏற்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+