தேவர் நினைவிடத்தில் பன்னீர் அஞ்சலி
சென்னை:
தேவர் ஜெயந்தியையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள அவரது நினைவிடத்தில்முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்த நாள் மற்றும் மறைவு நாளான செவ்வாய்க்கிழமை காலை மதுரைகோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு முதல்வர் பன்னீர்செல்வம் மாலை அணிவித்தார். பின்னர் அங்கிருந்துகார் மூலம் பசும்பொன் கிராமத்திற்கு அவர் சென்றார்.
பசும்பொன் கிராமத்தில் உள்ள தேவர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவருடன்சபாநாயகர் காளிமுத்து, அமைச்சர்கள் அன்வர் ராஜா, துரைராஜ், நைனார் நாகேந்திரன், தளவாய் சுந்தரம், வளர்மதிஜெபராஜ், எம்.பிக்கள் தினகரன், மலைச்சாமி, சீனிவாசன் ஆகியோரும் சென்றிருந்தனர்.
பின்னர் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேவர் புகைப்படக் கண்காட்சியையும் பன்னீர் செல்வம்பார்வையிட்டார்.
சென்னையில்...
சென்னை நந்தனம் சிக்னல் அருகே உள்ள தேவர் சிலைக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா,அமைச்சர்கள் பொன்னையன், ஜெயக்குமார், சரோஜா ஆகியோர் மாலை அணிவித்தனர்.
மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு, சென்னை நகர மேயர் மு.க. ஸ்டாலின், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் வாசன்,காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் குமரி அனந்தன், தங்கபாலு ஆகியோரும் மாலை அணிவித்தனர்.
எம்.ஜி.ஆர். அதிமுக சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் திருநாவுக்கரசு, கொள்கை பரப்புச் செயலாளர் லதாஆகியோரும் மாலை அணிவித்தனர்.
முன்னதாக தமிழ்நாடு தேவர் பேரவை சார்பில் 200 பெண்கள் முளைப்பாரி ஏந்தி ஊர்வலமாக வந்து தேவர்சிலைக்கு மரியாதை செலுத்தினர். ஊர்வலத்திற்கு பேரவைத் தலைவர் சீனிச்சாமித் தேவர் தலைமை தாங்கினார்.












Click it and Unblock the Notifications