புதுவை அமைச்சரவை குறித்து ரங்கசாமி சோனியாவிடம் ஆலோசனை
பாண்டிச்சேரி:
புதுவை முதல்வர் ரங்கசாமி இன்று அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்துஅமைச்சர்கள் தேர்வு குறித்து ஆலோசனை நடத்துகிறார்.
பாண்டிச்சேரியில் புதிய முதல்வராகப் பொறுப்பேற்றிருக்கும் ரங்கசாமி, பதவியேற்றபின் முதல் முறையாக நேற்று(திங்கள்கிழமை) டெல்லி சென்றார்.
அங்கு அவர் காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளர் குலாம் நபி ஆசாத்தைச் சந்தித்துஆலோசனை நடத்தினார். புதுவையில் தனது தலைமையில் அமையவிருக்கும் அமைச்சரவையில் இடம்பெறும்அமைச்சர்கள் குறித்து அவர்கள் இருவரும் ஆலோசனை நடத்தியதாகத் தெரிகிறது.
இதுகுறித்து இன்று காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியிடமும், ரங்கசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார்.
பாண்டிச்சேரி காங்கிரசுடன் கண்ணன் தலைமையிலான புதுவை மக்கள் காங்கிரசை இணைக்கும் முயற்சி குறித்தும்அப்போது ஆலோசிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
பிறகு அவர் ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன், பிரதமர் வாஜ்பாய் மற்ம் உள்துறை அமைச்சர் அத்வானி ஆகியோரைசந்திக்கிறார். முதல்வராகப் பதவியேற்றபின் அவர் மரியாதை நிமித்தமாக இந்தத் தலைவர்களைசந்திக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications