தமிழக-கேரள எல்லையில் பாதுகாப்பு தீவிரம்
மதுரை:
மதானியை விடுதலை செய்யக் கோரி தமிழக கேரள எல்லையில் நடத்தப்பட்டு வரும் ஆர்ப்பாட்டத்தை அடக்கஅப்பகுதியில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது.
நேற்று நடந்த சாலை மறியல் போராட்டத்தின்போது வன்முறைச் சம்பவங்கள் நடந்தன. பல லாரிகள் மற்றும்பஸ்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.
ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்த மக்கள் ஜனநாயக முன்னணி அமைப்பினர், தங்கள் தலைவர் மதானியைவிடுதலை செய்யாவிட்டால் போராட்டம் தீவிரமாகும் என்று தெரிவித்துள்ளனர்.
அடுத்த கட்டப் போராட்டம் சென்னை மற்றும் டெல்லியில் நடக்கும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். அடுத்தகட்டப் போராட்டம் மிகக் கடுமையாக இருக்கும் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதையடுத்து நேற்று ஆர்ப்பாட்டம் நடந்த பகுதிகளில் மேலும் வன்முறை ஏற்படலாம் என்பதால், அப்பகுதிகளில்பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள தகவலை தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் உறுதி செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications