இனி எளிதில் அமெரிக்க விசா கிடைக்காது

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்:

விசா வழங்கும் நடைமுறைகளை அமெரிக்கா கடுமையாக்க உள்ளது.

விசா கோரி வரும் விண்ணப்பங்களை விசாரிக்க புதிய அமைப்பையும் அமெரிக்கா உருவாக்க உள்ளது. அதேபோல அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டினரின் செயல்பாடுகளைத் தீவிரமாகக் கண்காணிக்கவும் இந்தஅமைப்புக்கு அதிகாரம் வழங்கப்பட உள்ளது.

நேற்று நடந்த உள்நாட்டு பாதுகாப்புக் கவுன்சில் கூட்டத்தில் பேசிய அமெரிக்க அதிபர் புஷ்,

இனி அமெரிக்காவுக்கு வர விரும்புபவர்களுக்கு விசா வழங்குவதில் அதிக கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும்.தீவிரவாதிகள், அவர்களுடன் தொடர்புடையவர்கள் யாரும் நாட்டுக்குள் நுழைந்துவிடாமல் தடுக்க நடவடிக்கைஎடுக்க வேண்டும்.

இந்த விஷயத்தில் வெளியுறவுத்துறைக்கு உதவ அன்னிய தீவிரவாதிகள் கண்டுபிடிப்பு அதிரடிப் படைஉருவாக்கப்படும்.

இந்தப் படைக்கு விசா வழங்குவதில் மட்டுமின்றி ஏற்கனவே விசா வாங்கி நாட்டுக்குள் நுழைந்துவிட்டதீவிரவாதிகளை கண்டறிந்து, கைது செய்யவும் அதிகாரம் வழங்கப்படும்.

நாங்கள் சட்டரீதியாக அமெரிக்காவுக்கு வருபவர்களை வரவேற்கிறோம். சுற்றுலாப் பயணிகளாக, கல்வி கற்கும்மாணவர்களாக, பணியாற்றுவதற்காக என இங்கு வர விரும்பும் எல்லோரையும் வரவேற்கிறோம்.

ஆனால், அமெரிக்க மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் யாரையும் அனுமதிக்க மாட்டோம். இங்கு வரும்வெளிநாட்டினரைத் தீவிரமாகக் கண்காணிக்கப் போகிறோம்.

கல்வி கற்பதற்காக விசா வாங்கிவிட்டு அமெரிக்காவுக்குள் நுழைந்தவர்கள் உண்மையிலேயே படிக்கிறார்களா?என்ன படிக்கிறார்கள் என்பதையும் விசாரிக்க உத்தரவிட்டுள்ளேன்.

இங்கு வந்து கல்வி கற்பவர்களால் அமெரிக்காவுக்குத் தீங்கு ஏற்படும் என்றால், அவர்களை உடனடியாகவெளியேற்றுவோம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+