அதிமுக கவுன்சிலர்களை கடத்திய அதிமுகவினர்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மதுராந்தகம் ஒன்றியக் குழுத் தலைவர் தேர்தலின்போது அதிமுக கவுன்சிலர்கள் சிலரை அதிமுகவினரே கடத்திச் சென்று விட்டதாகவெளியான தகவலையடுத்து அங்கு தேர்தல் தள்ளிவைக்கப்பட்டு விட்டது.
மதுராந்தகம் ஒன்றியக் குழுத் தலைவர் பதவிக்கு அதிமுக சார்பில் கொளத்தூர் முனுசாமி போட்டியிட்டார். அவரை எதிர்த்துஅதிமுகவைச் சேர்ந்த சுப்ரமணியன் என்பவர் போட்டி வேட்பாளராக களம் இறங்கினார். இதனால் பதற்றமான சூழ்நிலைஏற்பட்டது.
இந்த நிலையில் வாக்குப் பதிவின்போது முனுசாமியின் ஆதரவு கவுன்சிலர்களை சுப்ரமணியனின் ஆட்கள் வேனில் வைத்து கடத்திசென்று விட்டதாக செய்தி வந்தது. இதையடுத்து தலைவர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு விட்டது.












Click it and Unblock the Notifications