தலிபான் படைகள் மீது பி-52 பயங்கர குண்டுவீச்சு
ஜபல் சிராஜ்:
நார்தர்ன் அலையன்ஸ் படைகளுக்கு எதிராக நிறுத்தப்பட்டுள்ள தலிபான் படைகள் மீது அமெரிக்காவின் பி-52 ரகவிமானங்கள் மாபெரும் இன்று (புதன்கிழமை) குண்டு வீச்சுத் தாக்குதல் நடத்தின.
காபூலுக்கு வடக்கே ஷொமாலி மலைப் பகுதியில் மிக உயரத்தில் பறந்து சென்ற பி-52 விமானம் பெரியகுண்டுகளை தலிபான் படையினர் மீது வீசியது. இதையடுத்து அங்கு நிறுத்தப்பட்டுள்ள 6,000 தலிபான்கள் சிதறிஓடினர்.
இந்த குண்டுகள் விழுந்த இடங்களில் சுமம் 30 மீட்டர் உயரத்துக்கு புகையும் தூசியும் கிளம்பியது.
இந்த குண்டுகள் கரபாக் மற்றும் பக்ராம் விமானத் தளத்துக்கு இடையில் நிறுத்தப்பட்டுள்ள தலிபான் படையினர்மீது விழுந்ததாக நார்த்தர்ன் அலையன்ஸ் படையின் கமாண்டர் அமானுல்லா கோசர் கூறினார். அமெரிக்காவின்எப்-18 ரக விமானங்களும் கரபாக், கலோகன், ஹூசைன்கோட், பக்ராம் ஆகிய இடங்களில் தாக்குதல் நடத்தினஎன்றார்.
காபூல், காண்டஹார் மீதும் தாக்குதல்:
அமெரிக்க விமானங்கள் தலிபான்களின் தலைமையகமான காண்டஹார் மீதும் தலைநகர் காபூல் மீதும் கடும்தாக்குதல் நடத்தின. இதில் 8 பேர் காயமடைந்தனர்.
காலை 5 மணிக்கே இந்தத் தாக்குதல் தொடங்கிவிட்டது. மேலும் இங்குள்ள மலைக் குகைகள், பதுங்கு குழிகள்மீதும் குண்டுகள் வீசப்பட்டன.
அமெரிக்கத் தரைப் படை:
இந் நிலையில் ஆப்கானிஸ்தானுக்குள் சில நூறு அமெரிக்கப் படைகள் நுழைந்துள்ளதாக அமெரிக்கா ஒப்புக் கொண்டுள்ளது. இவர்கள் நார்த்தர்ன் அலையன்ஸ்படையினர் உள்ள பகுதியில் நிலை கொண்டிருப்பதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் டொனால்ட் ரம்ஸ்பீல்ட் கூறினார்.
அதே நேரத்தில் சில படைகள் ஆப்கானிஸ்தானின் தென் பகுதியில் அவ்வப்போது நுழைந்து தாக்குதல் நடத்திவிட்டு வருகின்றன. தென் பகுதியில் உள்ள சிலபழங்குடிப் பிரிவினர் தலிபான்களை எதிர்த்து வருகின்றனர். இவர்களின் ஆதரவைப் பெற முயல்வோம் என்றார்.












Click it and Unblock the Notifications