For Daily Alerts
Just In
இந்திய விமானப் படை புதிய தளபதி கிருஷ்ணசுவாமி
டெல்லி:
இந்திய விமானப் படையின் தலைமை தளபதியாக எஸ். கிருஷ்ணசுவாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
பாதுகாப்பு ஆய்வுத் துறையின் அக்னி விருது பெற்ற ஒரே போர் விமான பைலட் கிருஷ்ணசுவாமிதான்.
30 விதமான விமானங்களை ஓட்டியிருக்கும் கிருஷ்ணசுவாமி, 4,000 மணி நேரம் போர் விமானங்களில்பறந்துள்ளார்.
தற்போது விமானப் படைத் தளபதியாக இருக்கும் ஏ.ஒய். திப்னிஸ் வரும் டிசம்பர் 31ம் தேதி ஓய்வுபெறுவதையடுத்து, கிருஷ்ணசுவாமிக்கு இப்பதவி கிடைத்துள்ளது.
தற்போது விமானப் படைத் துணைத் தளபதியாக இருக்கும் கிருஷ்ணசுவாமி சென்னையைச் சேர்ந்தவர் என்பதுகுறிப்பிடத்தக்கது.
Comments
Story first published: Wednesday, October 31, 2001, 5:30 [IST]