நியூயார்க்: இந்தியத் தூதரக பெண் ஊழியர்களுக்கு ஆந்த்ராக்ஸ்
நியூயார்க்:
அமெரிக்காவில் நியூயார்க்கில் உள்ள இந்தியத் தூதரகத்தில் பணியாற்றும் 2 பெண் ஊழியர்களுக்கு ஆந்த்ராக்ஸ்தாக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
கடந்த திங்கள்கிழமை காலை ஜெயஸ்ரீ அலுவலகத்துக்கு வந்த ஒரு தபாலைப் பிரித்துப் பார்த்தார். அப்போது,அந்தக் கவரில் இருந்து பவுடர் போன்ற பொருள் அவரது முகம் மற்றும் கைகளில் தெறித்தது. இதையடுத்துஅருகில் இருந்த உமா, ஜெயஸ்ரீயின் அருகில் ஓடிவந்து என்ன ஆயிற்று என்று பார்த்தார்.
அப்போது அவர் மீதும் அந்தப் பவுடர் தெறித்து விழுந்தது. இந்த பவுடர் ஆந்த்ராக்ஸ் பாக்டீரியாவாக இருக்கலாம்என்ற சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து இந்த இருவரையும் மன்ஹாட்டனில் உள்ள லேனக்ஸ் ஹில் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரையும் மருத்துவர்கள் தீவிரமாகப் பரிசோதித்து வருகிறார்கள்.தற்போது அவர்களுக்கு ஆந்த்ராக்ஸ் தடுப்பு மருந்தான சிப்ரா கொடுக்கப்பட்டுள்ளது.
தூதரக அலுவலகத்தில் சிதறிய பவுடரை சேகரித்து ரசாயனப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதுகுறித்து தூதரக அதிகாரி சஷி திரிபாதி நிருபர்களிடம் கூறியதாவது,
தூதரகத்திற்கு வரும் தபால்கள் நன்றாக பரிசோதனை செய்யப்பட்ட பிறகு தான் உள்ளே பெறப்படுகின்றன.இருப்பினும் அந்தத் தடைகளையெல்லாம் தாண்டி, இந்தத் தபால் வந்துள்ளது.
தற்போது அந்தப் பவுடர் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எங்கள் அலுவலகத்தின் தபால் அறை பூட்டிசீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் செவ்வாய்க்கிழமை வழக்கம் போல் அலுவலகம் இயங்கும். பாஸ்போர்ட் மற்றும்விசா வழங்கும் பணி வழக்கம் போல நடைபெறும் என்றார்.
இவரது வீடு தூதரகம் அமைந்துள்ள கட்டிடத்தின் 4-வது மாடியில் அமைந்துள்ளது. தபால் அறை முதல் மாடியில்அமைந்துள்ளது. இந்த அறையில் நாள் தோறும் பாஸ்போர்ட் மற்றும் விசா குறித்து வரும் விண்ணப்பங்கள்மலைபோல குவித்து வைக்கப்பட்டிருக்கும்.