பாலத்தில் கவிழ்ந்தது பஸ் .. 11 பேர் படுகாயம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை அருகே உள்ள தாம்பரம், இரும்புலியூர் சாலைப் பாலத்தில் பயணிகள் பஸ் தலைகுப்புற கவிழ்ந்து விழுந்தது.
சூனாம்பேடு என்ற இடத்திலிருந்து சென்னைக்கு ஒரு பஸ் வந்து கொண்டிருந்தது. பிற்பகல் 1 மணியளவில் அந்த பஸ்இரும்புலியூர் அருகே சாலைப் பாலத்தில் வந்து கொண்டிருந்தது. மிக வேகமாக வந்த இந்த பஸ், தடுமாறி பாலத்தின்தடுப்பு சுவரில் மோதி தலைகுப்புற கவிழ்ந்து.
பாலத்தின் சுவரில் தொங்கியவாறு நின்றது.
இதில் பஸ்சில் பயணம் செய்து கொண்டிருந்த 11 பேர் படுகாயம் அடைந்தனர். அனைவரும் தாம்பரம் அரசு மருத்துவமனைக்குக்கொண்டு செல்லப்பட்டனர்.












Click it and Unblock the Notifications