பல கட்சிக் கவுன்சிலர்களை இழுக்கும் அதிமுக
சென்னை:
இன்று மாநகராட்சி துணை மேயர் மற்றும், நகராட்சித் துணைத் தலைவர்கள் தேர்தல் நடைபெறுவதையொட்டிசுயேச்சைகள் மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த கவுன்சிலர்கள் அதிமுகவில் சேர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இன்று (புதன்கிழமை) 6 மாநகராட்சிகளுக்கான துணை மேயர் தேர்தல் மற்றும் பல உள்ளாட்சிப்பொறுப்புகளுக்கான தேர்தல் நடைபெறுகிறது. நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில், மேயராக வெற்றிபெற்றவரின் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை.
இதேநிலைதான் நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளிலும் நிலவுகிறது.
இந்நிலையில் சுயேச்சைகளின் ஆதரவு அதிமுக மற்றும் திமுக ஆகிய கட்சிகளுக்கு அவசியமாகிறது. இதையடுத்து 2கட்சிகளும் சுயேச்சைகளை வளைப்பதில் கடந்த ஒரு வாரகாலமாகத் தீவிரம் காட்டிவருகின்றன.
இதன் பயனாக முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. சுப்பு நேற்று ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில்இணைந்தார்.
விழுப்புரம், பெரம்பலூர் மற்றும் திருவள்ளர் மாவட்டக்ளில் திமுக, காங்கிரஸ், பா.ஜ.க. மற்றும் சுயேச்சைகளாகநின்று வெற்றி பெற்ற 9 கவுன்சிலர்கள் அதிமுகவில் இணைந்தனர்.
மேலும் சென்னை அருகே உள்ள திருவெற்றியூர், பூந்தமல்லி, கத்திவாக்கம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த திமுக,காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் நிர்வாகிகள் ஜெயலலிதா முனனிலையில் அதிமுகவில் இணைந்தனர்.