ஐக்கிய நாடுகள் சபை தூதருடன் பேச தலிபான் மறுப்பு
இஸ்லமாபாத்:
ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு தூதருடன் பேச்சுவார்த்தை நடத்த தலிபான் அரசுமறுத்துவிட்டது.
ஆனால் ப்ரஹிமியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த தலிபான் அரசு மறுத்துவிட்டது.அவர் அமெரிக்கர்களுக்கு சாதகமாக செயல்படுவார் என்று கூறி அவரை சந்திக்க தலிபான்அரசு மறுத்துவிட்டது.
பாகிஸ்தானுக்கான ஆப்கானிஸ்தான் தூதர் முல்லா அப்துல் சலாம் சயீபை சந்தித்து ப்ரஹிமிபேசுவதாக இருந்தார். ஆனால் இந்த சந்திப்பு நடைபெறவில்லை.
இது குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் செய்தித் தொடர்பாளர் எரிக் ஃபால்ட் கூறுகையில்,ப்ரஹிமிக்கு போதிய நேரம் இல்லாத காரணத்தால் அவரால் சயீப் சந்தித்து பேசமுடியவில்லை என்றார்.
ஆனாலும் இதை தலிபான் மறுத்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள சிறப்பு தூதரைசந்திக்க வேண்டாம் என்று சயீப்புக்கு தலிபான் தலைவர் முல்லா முகமது ஓமர்உத்தரவிட்டார்.
ஐக்கிய நாடுகள் சபை பாரபட்சமின்றி நடந்து கொள்ளவில்லை. ஐக்கிய நாடுகள் சபைஅமெரிக்காவின் சொல்படிதான் நடக்கிறது என்று ஓமர் கூறியதாக ஏ.ஐ.பி. செய்திநிறுவனம் தெரிவித்துள்ளது.
என்னுடன் பேச்சுவார்த்தை நடத்த ப்ரஹிமி விருப்பமாக இருந்தார். ஆனால் அவருடன்பேச்சுவார்த்தை நடத்த ஓமர் அனுமதி அளிக்கவில்லை என்று சயீப் கூறியதாகவும் ஏ.ஐ.பிசெய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ப்ரஹிமி நேற்று (செவ்வாய்க்கிழமை)தலிபான் அரசுக்கு பதிலான மாற்று அரசு அமைப்பதுகுறித்து பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரபுடனும், நாடு கடத்தப்பட்ட ஆப்கானிஸ்தான்தவைர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தினார்.












Click it and Unblock the Notifications