அமெரிக்கத் தாக்குதலில் 1,500 பேர் பலி: தலிபான்

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்:

கடந்த மூன்று வாரங்களில் அமெரிக்கத் தாக்குதலுக்கு 1,500 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று தலிபான்ராணுவம் அறிவித்துள்ளது.

பாகிஸ்தானுக்கான தலிபான் துணைத் தூதர் சுஹைல் ஷாஹீன் கூறுகையில்,

அமெரிக்க விமானங்கள் வானிலிருந்து போடும் உணவுப் பொட்டலங்களுடன் குண்டுகளையும் சேர்த்தேவீசுகின்றனர். உணவை எடுக்கச் செல்லும் மக்கள் குண்டுகள் வெடித்து இறக்கின்றனர் என்றார்.

சிறப்புத் தூதரை நியமித்தது இந்தியா:

ஆப்கானிஸ்தான் விவகாரங்களுக்கான சிறப்புத் தூதராக எஸ்.கே.லம்பாவை இந்தியா நியமித்துள்ளது. இவர்முன்பு பாகிஸ்தானுக்கான இந்தியத் தூதராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் ஆப்கானிஸ்தானில் நடந்து வரும் பிரச்சனைகள் தொடர்பான சர்வதேச ஆலோசனைகளில் இந்தியாவின்சார்பில் பங்கேற்பார். அதே போல ஆப்கானிஸ்தானில் அடுத்த ஆட்சி அமைப்பது குறித்த உலக நாடுகளின்ஆலோசனைகளிலும் இந்தியப் பிரதிநிதியாகப் பங்கேற்பார்.

அடுத்த வாரம் இந்த விவகாரம் குறித்துப் பேச இந்தியா வரும் பிரிட்டிஷ், கிரீக் மற்றும் பிரான்ஸ் நாட்டுஅதிகாரிகளுடன் லம்பா முக்கிய ஆலோசனைகள் நடத்துவார்.

இவ்வாறு இந்திய அரசு தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+