பாமகவின் "சர்க்கஸ்" தொடருமா?
சென்னை:
உள்ளாட்சித் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி படுதோல்வி அடைந்ததை அடுத்து, தோல்விக்கான காரணங்களைஆராயவும், திமுக கூட்டணியில் தொடர்வது பற்றி முடிவெடுக்கவும் அக்கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் வரும் 2ம்தேதி நடைபெறுகிறது.
கடந்த சட்டசபை தேர்தலுக்கு முன்பு திமுக கூட்டணியில் இருந்த பா.ம.க., அதிலிருந்து அதிரடியாக விலகி, அதிமுககூட்டணியில் சேர்ந்தது. அப்போது தமிழகத்தில் ஓரளவு நல்ல வெற்றியைப் பெற்றது. ஆனால் பாண்டிச் சேரிசட்டசபை தேர்தலில் படுதோல்வி அடைந்தது.
இதையடுத்து அதிமுக கூட்டணியில் இருந்து விலகி மீண்டும் திமுக கூட்டணியில் இணைந்து உள்ளாட்சித் தேர்தலைபாமக சந்தித்தது.
உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட, காங்கிரஸ் மற்றும் மதிமுக போன்ற கட்சிகள் செல்லக் கூடியஅளவுக்கு வெற்றிபெற்றுள்ளன. ஆனால், திமுக கூட்டணியில் அங்கம் வகித்த பா.ம.க. படுதோல்வி அடைந்தது. பலஇடங்களில் நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களுக்குத் தள்ளப்பட்டது.
இந்தத் தோல்விக்கு திமுக தொண்டர்களின் உள்வேலைகளும் ஒரு காரணம் என்று பாமகவின் மேல்மட்டத்தலைவர்களே நம்புகின்றனர்.
இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கான காரணங்களை ஆராயவும், திமுக கூட்டணியில்நீடிக்கலாமா அல்லது விலகிவிடலாமா என முடிவு செய்யவும் வரும் 2ம் தேதி பாமகவின் செயற்குழுக் கூட்டம்நடைபெறவிருக்கிறது.
அதற்கு அடுத்த நாளான 3ம் தேதி பொதுக் குழுக் கூட்டமும் நடைபெறுகிறது. இதன் முடிவில் ஒரு புதிய அறிவிப்புவரும் என்று பாமக தொண்டர்கள் எதிர்பாத்துக் கொண்டிருக்கிறார்கள்.