துணை மேயர் தேர்தல் முடிவுகள்: திமுக-2, அதிமுக-1, தமாகா-1
சென்னை:
இன்று நடைபெற்ற துணை மேயர் தேர்லில் இதுவரை 4 மாநகராட்சிகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றில் திருச்சி மற்றும் திருநெல்வேலியில் திமுக வெற்றிபெற்றுள்ளது. சேலத்தில் அதிமுகவும், கோவையில்தமாகாவும் வெற்றிபெற்றுள்ளன.
நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலின் தொடர்ச்சியாக, சென்னை, மதுரை கோவை உள்ளிட்ட 6 மாநகராட்சிகளின்துணை மேயர் பதவிக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.
இதில் திருச்சி, திருநெல்வேலி, கோயம்புத்தூர் மற்றும் சேலம் ஆகிய 4 மாநகராட்சித் துணை மேயர் தேர்தல்முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
திருச்சியில் திமுக சார்பில் போட்டியிட்ட அன்பழகன் 34 வாக்குகள் பெற்று துணை மேயராக வெற்றி பெற்றுள்ளார்.இவரை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிட்ட மனோகரன் 25 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.
இதேபோல திருநெல்வேலியில் திமுக சார்பில் போட்டியிட்ட விஸ்வநாத பாண்டியனுக்கு 36 வாக்குகளும், அவரைஎதிர்த்துப் பேட்டியிட்ட அதிமுக வேட்பாளர் பரமசிவனுக்கு 20 வாக்குகளும் கிடைத்தன.
சேலத்தில் எல்லோரும் எதிர்பார்த்தபடி அதிமுக வெற்றி பெற்றுள்ளது.
அதிமுக வேட்பாளர் சவுந்தரபாண்டியனுக்கு 34 வாக்குகளும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர்கலையமுதனுக்கு 27 வாக்குகளும் கிடைத்தன.
கோவையில் அதிமுகவின் கூட்டணிக் கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் ரகுபதி வெற்றிபெற்றுள்ளார்.ரகுபதிக்கு 46 வாக்குகள் கிடைத்தன. இவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர்அம்சவேனிக்கு 22 வாக்குகள் கிடைத்தன.
இன்னும் சில மணிநேரங்களில் சென்னை மற்றும் மதுரை மாநகராட்சித் துணை மேயர் தேர்தல் முடிவுகள்அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.