லண்டன் ஓட்டல் வழக்கு: ஜெ.க்கு ஏன் சம்மன்? - நீதிமன்றம் கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

லண்டன் ஓட்டல் வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அனுப்பிய சம்மனைரத்து செய்யக் கோரி ஜெயலலிதா தாக்கல் செய்திருந்த மனு மீது விளக்கம் அளிக்கும்படி அரசுக்கு சென்னைஉயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் லண்டனில் 2 ஓட்டல்கள் வாங்கி விற்றதன் மூலம் ரூ.43 கோடி வரை சொத்துச்சேர்த்ததாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் தினகரன் எம்.பி ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்குத் தொடர்பாக 2 பேரையும் சென்னை முதன்மை நீதிமன்றத்தில் ஆஜராகம்படி நீதிபதி அசோக் குமார்சம்மன் அனுப்ப உத்தரவிட்டும், அதை அனுப்பாமல் இருந்தததால் ஜெயலலிதா ஆஜராக வில்லை.

இந்நிலையில் வரும் நவம்பர் 5ம் தேதி ஜெயலலிதா மற்றும், தினகரன் ஆகியோர் ஆஜராகும்படி நீதிமன்றஊழியர்களைக் கொண்டு சம்மன் அனுப்ப உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில் தனக்கு வழங்கப்பட்ட சம்மனை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதாசார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி பி.டி.தினகரன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது ஜெயலலிதா தரப்பில் வக்கீல் அசோகன் ஆஜராகி வாதாடினார். அவர் தனது வாதத்தில்,சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக, தனிநீதிமன்றத்தில் மேல் விசாரணை செய்யப்பட்டது.

இந்த மேல்விசாரணையின் போதுதான் லண்டனில் ஓட்டல் வாங்கியதாக வழக்குத் தொடரப்பட்டது. மேல்விசாரணைக்க தனிநீதிமன்றம்தான் அனுமதியளித்தது. இந்நிலையில் இந்த வழக்கை முதன்மை செஷன்ஸ்நீதிமன்றம் விசாரிக்க எந்த அதிகார வரம்பும் இல்லை என்றார்.

இதற்கு நீதிபதி, இதுகுறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறி, வழக்கை வரும் 1ம் தேதிக்குஒத்திவைத்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+