எதிர்ப் படையினருடன் தலிபான்களைத் தாக்கும் அமெரிக்க தரைப் படையினர்
வாஷிங்டன்:
ஆப்கானிஸ்தானில் தலிபான்களை எதிர்த்து தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கும் நார்த்தர்ன் அலையன்ஸ்படையினருடன் அமெரிக்க தரைப்படையினரும் சேர்ந்து கொண்டுள்ளனர்.
இதற்கு முன் அமெரிக்க தரைப் படையினர் ஆப்கானிஸ்தானில் இறங்கினார்களா இல்லையா என்பது குறித்துபல்வேறு ஊகங்கள் வெளிவந்து கொண்டே இருந்தன.
நூற்றுக்கணக்கான அமெரிக்க தரைப் படையினர் மேற்கு ஆப்கானிஸ்தானில் உள்ள நார்த்தர்ன் அலையன்ஸ்படையினருடன் சேர்ந்து கொண்டு, தலிபான் படைகள் மீது தொடர் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.
தாக்குதலோடு நிறுத்திக் கொள்ளாமல், அமெரிக்க போர் விமானங்கள் எங்கெல்லாம் தாக்குதல் நடத்த வேண்டும்என்ற தகவல்களையும் அளித்துக் கொண்டிருக்கின்றனர். மொத்தத்தில் அமெரிக்க போர் விமானங்களையும்அமெரிக்க தரைப் படையினர்தான் வழிநடத்திக் கொண்டிருக்கின்றனர்.
இதனால் முன்பை விட தற்போது அமெரிக்க விமானங்கள் சரியான நேரத்தில், சரியான இடத்தில் குண்டு வீச்சுத்தாக்குதல்களை நடத்திக் கொண்டிருக்கின்றன.
இதற்கிடையே அமெரிக்க போர் விமானங்கள் இன்று (புதன்கிழமை) அதிகாலை 1.30 மணிக்கு திடீரென்று காபூல்நகர் மீது பறந்தன என்றும் ஆனால் அவை குண்டு எதையும் வீசவில்லை என்றும் உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.