ராஜ்குமாரைக் கடத்த உதவிய 2 வீரப்பன் கூட்டாளிகள் கைது
தொட்டகாஜனூர் காட்டுப் பகுதி:
கன்னட நடிகர் ராஜ்குமாரைக் கடத்த சந்தன வீரப்பனுக்கு உதவிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 3பேரைத் தேடி வருகின்றனர்.
இவர்களில் பசவன்னா என்பவர் நேற்று இரவு திடீரென ஈரோடு மாவட்டம் திக்நாரை கிராமத்தைச் சேர்ந்த கிராமஅதிகாரி முன் தானாகவே சரணடைந்தார். ராஜ்குமாரைக் கடத்த வீரப்பனுக்கு தானும் நாகராஜ் என்பவரும் மேலும்3 பேரும் உதவியதாக அவர் தகவல் கொடுத்தார்.
இதையடுத்து இவரை கிராம அதிகாரி போலீசாரிடம் ஒப்படைத்தார். அவர் கொடுத்த தகவலின்பேரில்மல்லுக்குத்திபுரம் என்ற இடத்திற்கு ரகசியமாய் விரைந்த சிறப்புப் போலீஸ் படை இன்று காலை அங்கு நாகராஜைக்கைது செய்தனர். பசவன்னா தாளவாடி பகுதியைச் சேர்ந்தவர்.
தொட்டகாஜனூரில் தனது பண்ணை வீட்டில் குடும்பத்துடன் தங்கியிருந்த ராஜ்குமாரின் நடவடிக்கைகள்,நடமாட்டம் குறித்து வீரப்பனுக்கு இந்த இருவரும் மேலும் 3 பேரும் தொடர்ந்து தகவல் கொடுத்து வந்துள்ளனர்.
இவர்கள் கொடுத்த தகவலின்பேரில் தான் ராஜ்குமாரை வீரப்பன் இரவில் வந்து கடத்திச் சென்றுள்ளான். இந்தத்தகவல்களை இவர்களே போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.
இவர்களிடம் இருந்து 2 நாட்டுத் துப்பாக்கிகள், 20 ஜெலாட்டின் குச்சிகள், 20 டெடொனேட்டர்களையும் போலீசார்பறிமுதல் செய்தனர்.
இந்தக் கடத்தலில் மொத்தம் 22 பேருக்குத் தொடர்புள்ளதாக இவர்களிடம் நடத்திய விசாரணையில்தெரியவந்துள்ளது.
2000ம் ஆண்டு ஜூன் 31ம் தேதி இரவில் ராஜ்குமார் கடத்தப்பட்டார். அவரை 108 நாட்கள் பணயக் கைதியாகவைத்திருந்தான் வீரப்பன். நக்கீரன் ஆசிரியர் கோபாலால் அவரை மீட்க முடியாமல் போகவே, பழ.நெடுமாறன்தான் வீரப்பனுடன் பேசி அவரை விடுவித்து வந்தார்.
இந்தச் சம்பவத்தையடுத்து வீரப்பனைப் பிடிக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதிமுக ஆட்சிக்கு வந்தபின்னர் தேவாரம் தலைமையில் சிறப்பு அதிரடிப்படை காட்டுக்குள் புகுந்து வீரப்பனைத் தேடிக்கொண்டேடடடடட.... இருக்கிறது.