எல்லையில் பாகிஸ்தான் படைகள் அவசரமாகக் குவிப்பு: இந்தியாவைத் தாக்க திட்டம்?

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

ராஜஸ்தான், ஜம்மூ-காஷ்மீர் எல்லைகளில் பாகிஸ்தான் தனது படைகளை மிக வேகமாகக் குவித்து வருகிறது.

ஆப்கானிஸ்தானைத் தாக்க அமெரிக்காவுக்கு உதவி வருவதால் உள்நாட்டில் தனக்கு ஏற்பட்டுள்ள அரசியல்எதிர்ப்பை சமாளிக்கவும், ராணுவ எதிர்ப்பை திசை திருப்பவும் இந்தியா மீது கார்கில் போன்ற மீண்டும் ஒருதாக்குதலுக்கு பர்வேஸ் முஷாரப் தயாராகி வருவதாக இந்திய ராணுவம் கருதுகிறது.

ராஜஸ்தானில் கங்காநகர், காஷ்மீரில் அக்னூர் ஆகிய பகுதிகளில் தன்னுடைய ராணுவ ரிசர்வ் படைகளைபாகிஸ்தான் குவிக்க ஆரம்பித்துள்ளது.

அக்னூர் எல்லைப் பகுதியில் செனாப்-ஜீலம் ஆகிய இடங்களுக்கு இடையே 2 இன்பான்ட்ரி டிவிஷன்படைகளையும், கவச வாகனப் படைகளையும் இந்திய எல்லை நோக்கி நகர்த்தியுள்ளது. இவை எல்லையில்இருந்து 30 கி.மீ. தூரத்தில் நிலை கொண்டுள்ளன.

அதே போல ராஜஸ்தானில் பாவல்பூர் பகுதியில் 2 கவச வாகனப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. மேலும் ஒருபடைப் பிரிவு இங்கு விரைந்து கொண்டுள்ளது என இந்திய ராணுவ உளவுப் பிரிவு தெரிவித்துள்ளது. இவை தவிரமேலும் 2 பிரிகேட் படைகள் இதன் பின்னால் நிறுத்தப்பட்டுள்ளன.

பாகிஸ்தான் ராணுவத்தினரின் விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ராணுவ வீரர்கள் அனைவரும் உடனடியாகபணிக்குத் திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தியா விசாரணை:

எல்லையில் படைகள் குவிக்கப்பட்டு வருவது குறித்து இந்திய வெளியுறவுத்துறை பாகிஸ்தான்வெளியுறவுத்துறையுடன் விசாரித்தது. இதற்கு பாகிஸ்தான் படைகள் போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளாக பதில்கிடைத்தது.

ஆனால், இது வெறும் பயிற்சி என இந்தியா நம்பத் தயாராக இல்லை. தாக்குதல் நடத்துவதற்காகத் தான் படைக்குவிக்கப்படுவதாக ராணுவம் கருதுகிறது.

இதையடுத்து எந்தத் தாக்குதலையும் சந்திக்கத் தயாராக இருக்குமாறு இந்திய ராணுவத்துக்குஉத்தரவிடப்பட்டுள்ளது. எல்லையில் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும் ஆணையிடப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+