துபாயில் பின்லேடனை சந்தித்த சி.ஐ.ஏ. உளவாளி?
வாஷிங்டன்:
கடந்த ஜூலை மாதம் துபாய் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்த பின்லேடனை அமெரிக்காவின் சி.ஐ.ஏ.உளவுப் பிரிவு ஏஜெண்ட் சந்தித்தார் என்று பிரான்ஸ் நாட்டு பத்திரிக்கை கூறியுள்ளது.
சோவியத் யூனியன் ராணுவம் ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்தபோது அவர்களை எதிர்த்துப் போராட பல முஸ்லீம்தீவிரவாதிகளுக்கு (முஜாகிதீன்கள் )அமெரிக்கா நிதி, ஆயுதம், போர் பயிற்சி அளித்தது. இதுபோன்ற பயிற்சியும்உதவியும் பெற்ற முஜாகிதீன்களில் ஒருவர் தான் ஒசாமா பின் லேடன்.
அமெரிக்க உளவுப் பிரிவினருக்கும் ஒசாமா கும்பலுக்கும் நீண்ட தொடர்பு இருந்து வந்துள்ளது. கடந்த ஜூலைமாதத்தில் உடல் நிலை பாதிக்கப்பட்டு துபாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த பின்லேடனைசி.ஐ.ஏ. ஏஜெண்ட் ஒருவர் சந்தித்தார் என்று லே பிகாரோ அண்ட் ரேடியோ பிரான்ஸ் என்ற பத்திரிக்கைகூறியுள்ளது.
ஆனால், அப்படிப்பட்ட சந்திப்பே நடக்கவில்லை என சி.ஐ.ஏவின் செய்தித் தொடர்பாளர் அன்யா குயுல்ஷேர்மறுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications