பாகிஸ்தானில் குவியும் ஆப்கானிஸ்தான் அகதிகள்

Subscribe to Oneindia Tamil

குவெட்டா:

ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா தாக்குதலை தொடங்கியபின் இதுவரை 1 லட்சத்து 30 ஆயிரம் பேர்ஆப்கானிஸ்தானிலிருந்து அகதிகளாக சென்றுள்ளதாக ஐ.நா. சபை அகதிகள் கமிஷனின் செய்தி தொடர்பாளர்யூசூப் ஹசன் கூறியுள்ளார்.

சென்ற மாதம் 7ம் தேதி முதல் ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால்ஆப்கானிஸ்தானில் வசித்து வந்த ஆயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து அகதிகளாக வெளியேறியுள்ளனர்.

ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா தாக்குதல் தொடங்கிய பின் இது வரை 1 லட்சத்து 30 ஆயிரம் பேர் அகதிகளாகவெளியேறியுள்ளனர்.

இந்த வாரத் துவக்கத்தில் மட்டும் 80 ஆயிரம் பேர் அகதிகளாக பாகிஸ்தானுக்குச் சென்றுள்ளனர். குவெட்டா,பெஷாவர் நகரங்கள் தவிர வேறு பல இடங்களுக்கும் அகதிகள் சென்றுள்ளனர்.

தோர்ஹாம் எல்லையை கடந்து பெஷாவர் நகருக்கு 65 ஆயிரம் அகதிகள் சென்றுள்ளனர். சமான் எல்லையைகடந்து 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் பேர் வேறு பல இடங்களுக்கும் சென்றுள்ளனர்.

அமெரிக்காவின் தாக்குதல் தொடர்ந்தால் குறைந்த பட்சம் 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் அகதிகளாக வெளியேறும்வாய்ப்புள்ளது. இவர்களில் 1 லட்சம் பேர் பாகிஸ்தானுக்கு செல்லும் வாய்ப்பும் உள்ளது.

பாகிஸ்தானின் தென் மேற்கு பிராந்தியமான பலுசிஸ்தான் பகுதியிலும், வட மேற்கு எல்லை பகுதியிலும் 15அகதிகள் முகாம்களை ஐ.நா. சபை அமைத்துள்ளது.

ஆனால் அந்த முகாம்களில் யாரும் இல்லை. பெரும்பாலான அகதிகள் தாங்கள் நாடு கடத்தப்பட்டு விடுவோம்என்ற அச்சத்தில் குவெட்டா மற்றும் பெஷாவரிலிருக்கும் தங்கள் உறவினர் வீடுகளுக்கு சென்று விடுகின்றனர்என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+