For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மதுரை அருகே ஓடும் ரயிலில் ரூ.6 லட்சம் கொள்ளை

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

மதுரை அருகே ஓடும் ரயிலில் ஒரு வியாபாரியை வெட்டி, ரூ.6 லட்சம் கொள்ளையடிக்கப் பட்டது. கொள்ளைக்கும்பலைப் போலீசார் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

கடந்த திங்கள் கிழமை இரவு ராமேஸ்வரத்திலிருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலில் திருச்சி பெரியசெட்டித் தெருவைச் சேர்ந்த நகை வியாபாரி ரமேஷ் மற்றும் அவரிடம் பணிபுரியும் பாலு ஆகியோர் சென்றனர்.

இவர்கள் இருவரும் பழைய நகைகளை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தனர். ராமேஸ்வரம் சத்திரக்குடிஅருகே ரயில் வந்துகொண்டிருக்கும் போது அவர்கள் இருந்த ரயில் பெட்டிக்குள் 2 பேர் புகுந்தனர்.

அவர்கள் பாலுவின் அருகே சென்று அவர் அணிந்திரந்த நகைகளைப் பறிக்கும் போது அவர் கீழேவிழுந்துவிட்டார். அவரைக் காப்பாற்றச் சென்ற ரமேஷை அவர்கள் கத்தியால் வெட்டினர்.

பிறகு ரமேஷ் அணிந்திருந்த நகைகளையும், பணப்பையையும் பறித்தனர். அந்தப் பைக்குள் ரூ.2 லட்சம் மதிப்புள்ளதங்க நகைகள் மற்றம் ரூ.4 லட்சத்து 60 ஆயிரம் ரொக்கப் பணமும் இருந்தது.

இதுகுறித்து ரயில் பயணச் சீட்டுப் பரிசோதகருக்கத் தகவல் தரப்பட்டது. உடனே அவர் அபாயச் சங்கிலியைப்பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினார். அந்த நேரத்தில் கொள்ளையர்கள் ரயிலிருந்து இறங்கித் தப்பி ஓடினர்.

இதுகுறித்து ரமேஸ் மற்றம் பால ஆகியோர் மதுரை போலீசிடம் புகார் கொடுத்தனர். இதையடுத்துகொள்ளையர்களைப் பிடிக்க ரயில்வே ஐஜி சேகர் உத்தரவின் பேரில் தனிப் போலீஸ் படை அமைக்கப்பட்டது.போலீசார் கொள்ளையர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X