ஆண் கவுன்சிலரை செருப்பைக் காட்டி மிரட்டிய பெண் கவுன்சிலர்
சென்னை:
சென்னை துரைப்பாக்கம் பஞ்சாயத்து யூனியன் வார்டு உறுப்பினர் ஹரிகிருஷ்ணனை இன்னொரு பெண்கவுன்சிலர் செருப்பைக் காட்டி மிரட்டியதாக போலீஸில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னை புறநகர்ப் பகுதியான துரைப்பாக்கம் பஞ்சாயத்து யூனியனில் கவுன்சிலராக இருப்பவர் ஹரிகிருஷ்ணன்.அதே பஞ்சாயத்தில் கவுன்சிலராக இருப்பவர் லலிதா. தேர்தல் தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறுஇருந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை லலிதா ஒரு கும்பலுடன் ஹரிகிருஷ்ணனின் வீட்டிற்கு வந்தார். அங்கு தரக்குறைவாக பேசி ஹரியைத் திட்டியுள்ளார்.
இதையடுத்து இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் தனது செருப்பைக் கழற்றிய அந்தப்பெண் கவுன்சிலர் அதை ஆண் கவுன்சிலர் ஹரிகிருஷ்ணன் முகத்துக்கு எதிரே நீட்டி மிரட்டினார்.
பெண் என்பதால் அவரை அடிக்க முடியாத ஹரிகிருஷ்ணன் இது தொடர்பாக துரைப்பாக்கம் போலீஸில் புகார்கொடுத்துள்ளார்.
பதவிக்கு வந்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் பெண் கவுன்சிலரின் இந்த ஆகாத செயல் அனைவரையும்அதிர்ச்சியடையச் செய்துள்ளது.












Click it and Unblock the Notifications