உள்ளாட்சித் தேர்தல் வன்முறை: திமுக எம்பிக்கு முன் ஜாமீன்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது வன்முறையில் ஈடுபட்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டதிமுக எம்.பியான குப்புசாமிக்கு சென்னை உயர்நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியுள்ளது.

கடந்த 21ம் தேதி உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணும் பணி சென்னையில் நடந்தபோது, பல வாக்கு எண்ணிக்கைமையங்களில் வன்முறையில் ஈடுபட்டதாக திமுக எம்.பி.குப்புசாமி மற்றும் பலர் மீது போலீசார் வழக்குப் பதிவுசெய்துள்ளனர்.

இவர்களில் குப்புசாமி மற்றும் 8 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுதாக்கல் செய்துள்ளனர்.

அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:

சென்னை சென்ட்ரல் பாலிடெக்னிக்கில் வாக்கு எண்ணும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, அங்கிருந்ததிமுக உள்ளிட்ட மற்ற கட்சியின் ஏஜென்டுகளை அதிமுகவினர் விரட்டி அடித்தனர். உள்ளே அவர்கள் மட்டும்இருந்துகொண்டு முறைகேடுகளில் ஈடுபட்டனர்.

நாங்கள் அமைதியாக நின்றுகொண்டிருந்தோம். ஆனால் எங்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.அவர்கள் எந்த நேரத்திலும் எங்களைக் கைது செய்ய வருவார்கள். எனவே எங்களுக்கு முன்ஜாமீன் வழங்குங்மபடிகேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி கனகராஜ் தன்னுடைய தீர்ப்பில் திமுகஎம்.பி குப்புச்சாமி மற்றும் 8 பேருக்கும் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+