பொது இடங்களில் தம் அடிக்க சுப்ரீம் கோர்ட் தடை
டெல்லி:
நாடு முழுவதும் பொது இடங்களில் புகை பிடிப்பதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
மஹாஷ்டிர மாநில காங்கிரஸ் பிரமுகர் முரளி தியோரா சுப்ரீம் கோர்ட்டில் ஒரு பொதுநல வழக்குத்தொடர்ந்திருந்தார். அதில் பொது இடங்களில் புகைபிடிப்பதைத் தடைசெய்ய வேண்டும் என்றும், சிகரெட்நிறுவனங்கள் விளம்பர விதிகளை மீறுவதை தடுக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
இந்த மனு மீது நீதிபதிகள் எம்.பி.ஷா, மற்றும் ஆர்.பி.சேத்தி ஆகியோர் விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கில்நீதிபதிகள் இன்று தீர்ப்பளித்தனர். அவர்கள் அளித்த உத்தரவு விவரம்:
பொது இடங்களில் புகை பிடிப்பதற்கு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தடைவிதிக்கவேண்டும்.
மேலும் டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூர் மற்றும் அஹமதாபாத் நகரங்களின் போலீஸ்கமிஷ்னர்கள், புகைபிடிப்பதைத் தடுக்கவும், சிகரெட் கம்பெனிகள் விதிமுறைகளை மீறி விளம்செய்வதைத்தடுக்கவும் தாங்கள் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து இன்னும் 6 வாரங்களுக்குள் எங்களுக்கு அறிக்கைஅனுப்ப வேண்டும்.
பொது இடங்கள் என்பதில் மருத்துவமனைகள், பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள், பொது நிறுவனங்கள்,நீதிமன்றங்கள், கல்வி நிறுவனங்கள், நூலகங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் ஆகியவை அடங்கும்.
இவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.
இந்த வழக்கில் மனுதாரர் சார்பில் இந்திரா ஜெய்சிங் ஆஜராகி வாதாடினார். மத்திய அரசின் சார்பில் அட்வகேட்ஜெனரல் சோலி சொராப்ஜி ஆஜரானார். அவர் புகைபிடிப்பத தடைசெய்ய வேண்டும் என்பதற்கு ஜெய்சிங் எடுத்துக்கூறிய காரணங்களை ஆமோதித்தார்.
ஏற்கனவே கோவா மற்றும் டெல்லியில் பொது இடங்களில் புகை பிடிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது.
தமிழகத்திலும் தடைசெய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் அமல்படுத்தப்படவில்லை.












Click it and Unblock the Notifications