திங்கள்கிழமை முதல் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி
சென்னை:
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி வரும் திங்கள்கிழ-ம -முத-ல் துவங்குகிறது.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி சாரங்கி கூறியதாவது:
-நாடு முழுவதிலும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி திங்கள்கிழமை துவங்குகிறது. தமிழகத்திலும் அன்றேஇப்பணி துவங்குகிறது.
இதன்படி வரும் ஜனவ-ரி மாதம் 1ம் தேதி முதல் 18 வயது -நிரம்பியோர் தங்களது பெயர்களை வாக்காளர்பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம்.
இதேபோல, வாக்காளர் பட்டியலில் இன்னும் தங்களது பெயர்களை சேர்க்காதவர்களும், பெயர்நீக்கப்பட்டவர்களும் கூட தங்களது பெயர்களை சேர்த்துக் கொள்ளலாம்.
ஒரு மாத காலத்திற்கு இப்பணி -நடைபெறும். இந்தப் பணியில் ஈடுபட்டு வீட்டுக்கு வீடு வரும் வாக்காளர் பெயர்சேர்ப்பு அலுவலர்களிடம் வாக்காளர் அடையாள அட்டை குறித்த குறை இருந்தாலும் தெரிவிக்கலாம்.
வரைவு வாக்காளர் பட்டியல் ஜனவ-ரி 16ம் தேதி வெளியிடப்படும். அதற்குப் பிறகு 31ம் தேதி வரை பெயர்களைசேர்த்தல் மற்றும் திருத்தல் பணி நிடைபெறும். இறுதி வாக்காளர் பட்டியல் மார்ச் மாதம் 25ம் தேதி வெளியிடப்படும்என்று சாரங்கி கூறினார்.
முன்னதாக, வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி குறித்து ஆலோசிக்க அனைத்துக் கட்சி பிரதி-நிதிகள் கூட்டம்தலைமைத் தேர்தல் அதிகா-ரி சாரங்கி தலைமையில் சென்னையில் வெள்ளிக்கிழமை நடந்தது. இந்தக் கூட்டத்தில்கலந்து கொண்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள், தற்போது தமிழகத்தில் மழைக் காலமாதலால் திருத்தப் பணியைதள்ளி வைக்க வேண்டும் என்று கோ-ரிக்கை விடுத்தனர்.












Click it and Unblock the Notifications