சத்துணவில் முட்டைக்குப் பதில் சத்துருண்டை
திருச்சி:
சத்துணவுடன் முட்டை கொடுப்பதற்குப் பதில் சத்துமாவு அடங்கிய உருண்டை கொடுக்கும் திட்டம் தமிழகத்தில்தொடங்கி வைக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் பள்ளிக் குழந்தைகளுக்கு எம்.ஜி.ஆர். ஆட்சியில் இலவச மதிய உணவுத் திட்டம்அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் ஆட்சிக்கு வந்த கருணாநிதி சத்துணவுடன் முட்டை வழங்கினார்.
இப்போது முட்டைக்குப் பதிலாக, புரதச் சத்து நிறைந்த உருளைக்கிழங்கு, பாசிப் பயறு மற்றும் கொண்டைக் கடலைஆகியவை அடங்கிய சத்து உருண்டை வழங்கும் திட்டத்தை அதிமுக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த சத்து உருண்டை 20 கிராம் எடையுடன் உள்ளது.
இந்த சத்து உருண்டை வழங்கும் திட்டம் பல மாவட்டங்களிலும் படிப்படியாக அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.
முட்டை உற்பத்தியாளர்கள் பாதிப்பு
சத்துணவில் முட்டை வழங்குவதற்காக வாரத்திற்கு 2 லட்சம் முட்டைகளை தமிழக அரசு நாமக்கல் கோழிப்பண்ணை உரிமையாளர்களிடம் இருந்து வாங்கி வந்தது. ஆனால் தற்போது, அத் திட்டம் கைவிடப்பட்டதால்முட்டை உரிமையாளர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து நாமக்கல் கோழிப்பண்ணை உரிமையாளர்கள் கூறுகையில், முட்டை வியாபாரம் பெருமளவில்பாதிக்கப்பட்டுள்ளது. கோழிப் பண்ணைத் தொழிலில் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றனர்.












Click it and Unblock the Notifications