ஆந்திராவுக்குக் கடத்தப்பட்ட 18 தமிழக மீனவர்கள் மீட்பு
சென்னை:
ஆந்திராவுக் கடத்தப்பட்ட சென்னையைச் சேர்ந்த 18 மீனவர்கள் அபராதத் தொகை செலுத்தி மீட்கப்பட்டனர்.
சென்னை காசிமேடு, மற்றும் ராயபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 18 மீனவர்கள் கடந்த 22ம் தேதி 3 படகுகளில்கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர்.
அப்போது அவர்கள்ன தவறுதலாக ஆந்திர கடல் எல்லைக்குள் புகுந்து மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போதுஅந்தப் பக்கமாக மீன்பிடித்துக் கொண்டிருந்த ஆந்திர மீனவர்கள், தமிழகத்தைச் சேர்ந்த 18 மீனவர்களையும்கடத்திக் கொண்டு ஆந்திரா சென்று விட்டனர்.
மேலும் அவர்களிடம்இருந்த மீன்களையும் பறித்துக் கொண்டனர்.
பிறகு இதுகுறித்த தகவல் சென்னை மீனவர் சங்கத் தலைவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து ஒரு குழு ஆந்திராவுக்குச் சென்று அங்கு, தமிழக மீனவர்களைக் கடத்தி வைத்திருந்த ஆந்திரமீனவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியது. அப்போது அவர்கள் 1 லட்சம் ரூபாய் அபராதமாகக் கேட்டுள்ளனர்.பின்னர் பேச்சுவார்த்யிைன் முடிவில் அபராதத் தொகை ரூ.29 ஆயிரமாகக் குறைக்கப்பட்டது.
இந்தத் தொகையைச் செலுத்தியவுடன், 18 மீனவர்களும் விடுவிக்கப்ட்டு, அவர்கள் அனைவரும் சென்னைக்குகொண்டு வரப்பட்டனர்.