For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காஷ்மீரில் எல்லைக்குள் ஊடுறுவ முயன்ற 21 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

By Staff
Google Oneindia Tamil News

ஜம்மு:

காஷ்மீருக்குள் அத்துமீறி நுழைய முயன்ற லக்ஷர்- இ- தொய்பா தீவிரவாதிகள் 21 பேர்பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஜம்மு - காஷ்மீர், பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுக்கு அருகேயுள்ளலோரன் - மண்டி - கப்சி என்ற இடத்தில் எல்யைை தாண்டி இந்தியாவுக்குள் தீவிரவாதிகள்அத்து மீறி நுழைய முயன்றனர். தீவிரவாதிகள் நுழைய முயன்ற பகுதியை ராணுவத்தினர்சுற்றி வளைத்தனர்.

இதையடுத்து ராணுவவீரர்களை நோக்கி தீவிரவாதிகள் சராமாரியாக துப்பாக்கி சூடுநடத்தினர். இந்திய ராணுவ வீரர்களும் திருப்பி சுட்டனர்.

இதில் 21 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்கள் அனைவரும் பாகிஸ்தான்ஆதரவு பெற்ற லக்ஷார்- இ- தொய்பா அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் என்றுகூறப்படுகிறது. அந்த பகுதியில் தொடர்ந்து துப்பாக்கி சூடு நடந்து வருவதாகவும்கூறப்படுகிறது.

ரஜோரி மாவட்டத்தில் நடந்த மற்றொரு சம்பவத்தில் 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இந்திய தரப்பில் ஒரு அதிகாரி உள்ளிட்ட 2 பேர் கொல்லப்பட்டனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X