For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கடும் சண்டையில் தலிபான் பகுதியை பிடித்தது நார்த்தர்ன் அலையன்ஸ்

By Staff
Google Oneindia Tamil News

காபூல்:

நார்த்தர்ன் அலையன் நடத்திய பயங்கர தாக்குதலை சமாளிக்க முடியாத தலிபான் ராணுவத்தைச் சேர்ந்த 800 பேர்அதிலிருந்து விலகி நார்த்தர்ன் அலையன்சில் சேர்ந்தனர்.

இதனால் இவர்களின் கட்டுப்பாட்டில் இருந்த அக்-குப்ருக் என்ற பெரிய கிராமத்தை நார்த்தர்ன் அலையன்ஸ்கைப்பற்றியது.

வடக்கு ஆப்கானிஸ்தானில் மஷார்-ஏ-ஷெரீப் அருகே உள்ள இந்த கிராமத்தை பாதுகாத்து வந்த தலிபான்கள்அனைவரும் நார்த்தர்ன் அலையன்ஸ் பக்கம் அணி மாறிவிட்டனர். இத்தகவலை நார்த்தர்ன் அலையன்சின்செய்தித் தொடர்பாளர் குவாரி குல்தரதுல்லா தெரிவித்தார்.

முன்னதாக இரு தரப்பினரும் 3 மணி நேரம் நள்ளிரவில் கடும் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர். இதில் 80வீரர்கள் கொல்லப்பட்டனர். ஆனால், இறுதியில் அணி மாறிவிடத் தயாராக இருப்பதாக தலிபான்கள்கூறியதையடுத்து தாக்குதலை நார்த்தர்ன் அலையன்ஸ் நிறுத்தியது என்றார்.

அமெரிக்கத் தாக்குதல் ஆரம்பித்ததில் இருந்து தலிபான் வீரர்கள் பெரும் எண்ணிக்கையில் எதிர்ப் படையில்சேர்ந்ததும், அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியை நார்த்தர்ன் அலையன்ஸ் கைப்பற்றியதும் இதுவேமுதல்முறையாகும்.

இதற்கிடையே 28வது நாளாக தலிபான் ராணுவத்தினர் மீது அமெரிக்க விமானங்களின் குண்டுவீச்சு தொடர்கிறது.

காபூல் மீது அமெரிக்க விமானங்கள் காலை முதல் குண்டுகளை வீசி வருகின்றன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X