பன்னீரின் பயந்த சுபாவத்துக்கு வைகோ புது விளக்கம்
சென்னை:
தமிழக முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு உரிய கெளரவம் வழங்கப்படாததால்தான் அவர் பயந்த நிலையிலேயேஎப்போதும் காணப்படுகிறார் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
உள்ளாட்சித் தேர்தலின் வெற்றி-தோல்வி குறித்து மதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று (சனிக்கிழமை) நடந்தகூட்டத்தைத் தொடர்ந்து வைகோ அளித்த பேட்டி:
பன்னீர்செல்வம் எளியவர். அவரை நான் மனமாறப் பாராட்டுகிறேன்.
அவருக்கு முதல்வருக்கு உரிய மரியாதை வழங்கப்படவில்லை. இது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.
முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்துக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அவர் பசும்பொன் சென்றபோது,முதல்வருக்குத் தரவேண்டிய மரியாதையை அரசு தரவில்லை.
அதிமுகவின் இரண்டாம்கட்டத் தலைவர்கள் சென்றபோது தரப்பட்ட வரவேற்புகூட பன்னீர்செல்வத்துக்குவழங்கப்படவில்லை. இதனால்தான் அவர் பயந்த சுபாவத்துடன் காணப்படுகிறார்.
அவர் சுயமாகச் செயல்பட வேண்டும். அப்போதுதான் அரசு ஸ்திரமாகச் செயல்பட முடியும் என்றார் வைகோ.












Click it and Unblock the Notifications