கள்ளச் சாராயம் விற்ற 70 வயது பாட்டி கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் கள்ளச் சாராயம் விற்ற 70 வயது பாட்டி கைது செய்யப்பட்டார்.
வண்ணாரப்பேட்டையில் வள்ளி என்ற முதிய பெண் கள்ளச் சாராயம் விற்று வந்தார். கிட்டத்தட்ட 50 வருடமாகஇவர் இந்தத் தொழில் செய்து வருகிறார். ஆனால், இவர் சாராயம் விற்கும் தகவல் சமீபத்தில் தான் போலீசாருக்குத்தெரிந்ததாம்!.
இதையடுத்து தனிப்படை போலீசார் அங்கு விரைந்து வள்ளியையும் அவருக்கு உதவியாக இருந்து வந்த 3பேரையும் கைது செய்தனர்.
70 வயது பாட்டி கள்ளச் சாராயம் காய்ச்சி, உதவிக்கு ஒரு கும்பலையும் வைத்துக் கொண்டு செயல்பட்டு வந்ததுஅங்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications