கணவரைக் காயப்படுத்திய டிரைவரைத் தாக்கிய பெண்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ராஜபாளையம் அருகே கணவர் மீது மோதிய பஸ்சின் டிரைவரை அவரது மனைவியும், மகனும் சேர்ந்து தாக்கினர்.

ராஜபாளையம் அருகே உள்ளது ஆலங்குளம். இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் வேலுச்சாமி. இவர் மீது இரண்டு நாட்களுக்கு முன்தனியார் பஸ் மோதியது. இதில் அவரது கை உடைந்தது. ராஜபாளையம் மருத்துவமனையில் அவர் தற்போதுஅனுமதிக்கப்பட்டுள்ளார்.

வேலுச்சாமியை அவரது மனைவியும், மகனும் மருத்துவமனையில் பார்த்து விட்டு ஆலங்குளம் திரும்பிக் கொண்டிருந்தனர்.அவர்கள் வந்த பஸ்தான், வேலுச்சாமியை சில நாட்களுக்கு முன் மோதியது. அதே டிரைவர் குணசேகரன்தான் பஸ்சை ஓட்டிவந்தார்.

ஆலங்குளம் வந்தபோது, வேலுச்சாமியின் மனைவியும், மகனும் பஸ்சை விட்டு இறங்கினர். அவர்கள் இறங்குவதற்கு முன்பேடிரைவர் குணசேகரன் பஸ்சை எடுத்ததாகத் தெரிகிறது.

இதையடுத்து கோபத்தின் உச்சிக்கே சென்று விட்ட வேலுச்சாமியின் மனைவியும், மகனும், இப்படித்தானே அவசரப்பட்டு எனதுகணவரை காயப்படுத்தினீர்கள். இப்போது எங்களையும் கொல்லப் பார்க்கிறீர்களா என்று ஆவேசமாக கேட்டுக் கொண்டுசெருப்பை கழற்றி குணசேகரனை சரமாரியாக அடித்துள்ளார்.

அவரது மகனும் கைகளால் குணசேகரனைத் தாக்கியுள்ளார்.

இதுகுறித்து குணசேகரன் போலீஸில் புகார் கொடுத்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+