பஸ்சை ஓட்டி வந்த டிரைவர் மாரடைப்பில் பலி
சென்னை:
மார்த்தாண்டத்திலிருந்து சென்னை நோக்கி வந்த அரசு விரைவுப் பேருந்தின் டிரைவர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். ஆனால், தனதுவலியையும் பொறுத்துக் கொண்டு பஸ்ஸை நிதானமாக ஓட்டி ஓரமாக நிறுத்தி பயணிகளின் உயிரை அந்த டிரைவர் காத்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் நகரிலிருந்து சென்னைக்கு அரசு விரைவுப் பேருந்து வந்து கொண்டிருந்தது. பஸ்சை டிரைவர்காமராஜ் ஓட்டி வந்தார். மற்றொரு டிரைவர் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார்.
பஸ் மதுராந்தகம் அருகே வந்தபோது டிரைவர் காமராஜுக்கு கடும் நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனடியாக பஸ்ஸை அவர் ஓரம் கட்டினார்.உடனடியாக தூங்கிக் கொண்டிருந்த டிரைவரை எழுப்பி அவரிடம் பஸ்சை ஓட்டச் சொன்னார்.
உடனடியாக பஸ் மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு டிரைவர் காமராஜை மருத்துவமனையில்சேர்த்தனர். ஆனால் காமராஜ் இறந்து விட்டார்.
டிரைவர் காமராஜின் உடல் அவரது சொந்த ஊரான புள்ளூர்விளைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.












Click it and Unblock the Notifications