சவுதி அரேபியாவின் ரம்ஜான் பயம்
இஸ்லாமாபாத்:
ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா தாக்குதலை நிறுத்தாவிட்டால், ரம்ஜான் மாதத்தில் முஸ்லீம்களின் புனிதநகரமான மெக்காவில் பெரும் வன்முறை வெடிக்கும் என சவுதி அரேபியா அச்சம் தெரிவித்துள்ளது.
சில தினங்களுக்கு முன் திடீரென பாகிஸ்தான் வந்த அவர் அதிபர் பர்வேஸ் முஷாரபை சந்தித்துப் பேசினார்.ரம்ஜான் மாதத்தில் ஆப்கானிஸ்தானில் தாக்குதலை நிறுத்த அமெரிக்காவை நிர்பந்திக்குமாறு முஷாரபை அவர்கேட்டுக் கொண்டார்.
முஷாரப் பல நாட்களாகவே இதைக் கோரி வருகிறார். ஆனால், அதை ஏற்க அமெரிக்கா மறுத்துவிட்டதுகுறிப்பிடத்தக்கது. மேலும் சவுதி அரேபியாவைச் சேர்ந்த பின் லேடன் அங்கு அரசர் ஆட்சி முறையையும் எதிர்த்துவருகிறார். அங்கு இஸ்லாமிய அரசு அமைக்க வேண்டும் என்ற பின் லேடனின் கோரிக்கைக்கு சவுதிஅரேபியாவில் ஆதரவு பெருகி வருகிறது.
சவுதி முழுவதுமே பின் லேடனுக்கு ஆதரவு உள்ளது.
இந் நிலையில் ரம்ஜான் மாதத்தில் அமெரிக்கத் தாக்குதல் தொடர்ந்தால், லேடனின் தூண்டுதல் காரணாக சவுதிஅரேபியாவில் வன்முறை வெடிக்கலாம், ஆட்சி நடத்தி வரும் அரசருக்கு எதிராக மக்கள் புரட்சி ஏற்படலாம் என்றுஅந் நாடு கருதுகிறது.
குறிப்பாக ரம்ஜான் பண்டிகையன்று இங்கு கூடும் லட்சக்கணக்கான மக்கள் அரசுக்கு எதிராக களத்தில் குதிக்கவாய்ப்புள்ளது.
சவுதி அமைச்சரின் இந்தக் கருத்தை நேற்று பாகிஸ்தான் வந்த அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் டொனால்ட்ரம்ஸ்பீல்டிடம் முஷாரப் தெரிவித்தார்.
ஆனால், உங்கள் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடிகிறது. தாக்குதலை நிறுத்திய மறு நிமிடமே தீவிரவாதிகள்எங்களைத் தாக்குவார்கள் என்று உளவுப் பிரிவுகள் எச்சரித்துள்ளன. இதனால், பல அப்பாவி உயிர்கள்பலியாகலாம். அதற்கு இடம் தர அமெரிக்கா விரும்பவில்லை என்று ரம்ஸ்பீல்ட் கூறிவிட்டார்.












Click it and Unblock the Notifications